Friday, March 16, 2012

தனிமை...

தனிமைகள் உடன் வர
நிழல்கள் மட்டும் துணையாகி
புரியாத மனிதர்களுக்குள்
நான் என்பதும் தொலைந்து
முகமூடி அணியா உறவுகளை
தேடி அலைந்தபடி
ஊரிலிருந்து உறவுகள்
குரல் கேட்கும் போதெல்லாம்
உள்ளுக்குள் ஊமையாய் அழுது
உதடுகள் நலமென மொழியும்
ஆன்மாக்கள் அழுதபடி
என்னைப் போல் இன்னும் எத்தனை பேரோ....

No comments:

Post a Comment