Sunday, September 18, 2011

என்னவளே
உன் முகத்தை.. ஒருமுகமாக்கி..
என் கண்ணில் சிறை வைத்துள்ளேன்.
உன் வாசத்தை சுவாசமாக்கி உயிர் வாழ்கிறேன்.
உன் நினைவுகளை
இதயத்துக்குள் வைத்துபாதுகாக்கிறேன்.
உனக்காக நான் இத்தனை செய்தும்,
என்னை தனியாகவிட்டு செல்கிறாயே பெண்ணே....!!!

Wednesday, September 14, 2011

மலராத காதல்

என் வாழ்க்கை
ஏனோ
சந்தோஷமாக இல்லை
புரிந்து கொள்ளாத
என் அன்பும்
குருட்டுதனமான என் நம்பிகையும்
முட்டாள்தனமென்று
தெரியாமல்
இருந்தேன்
உன் முன்னால்...
உனக்காக கடந்து சென்ற நாட்களும்,
என் நிம்மதி,சந்தோஷம் உனக்காக
அத்தனையும் இழந்தேன்,
இன்றுவரை மலராமல் இருப்பது
என் சந்தோஷம் மட்டுமல்ல …….
அன்று நீ தூக்கி எறிந்த
ரோஜாவும்தான் தான்………….. !!!

Friday, September 9, 2011

காதல்.....

சொன்ன காதல்
என்றாவது
ஒருநாள்
வெல்லும்..!
அனால்,
சொல்லாத காதல்
ஒவ்வொரு நாளும்
‘இதயத்தை’
கொள்ளும்......!!!

உயிரே!

உயிரே!
உன்னைத் தேடியே
தொலைந்து போன
என் இதயத்தை
நீதானே
எடுத்து வைத்திருந்தாய்
எனக்குத் தெரியாமலேயே……

அதிஷ்டம் இல்லாதவன்......

இவ்வுலகில் அதிர்ஷ்டம் இல்லாத முதல் மனிதன்
நான்தான் வலிகளையும் வேதனைகளையும் மட்டுமே
அறிந்தவன் எதுவும் நிலைத்ததில்லை ஏமாற்றத்தை தவிர
என் வாழ்வில் ஏமாற்றம் சகஜம் என்றாலும்
வாழ்வே ஏமாற்றம் என்றால்
மனசு தாங்காத நிஜம் என்னவென்றால்
எல்லா பாசமும் என்னை பாசம் செய்ய
மறக்கிறதா பாசம் இருப்பது போல்
நடிக்கிறதா என்று அறிய முடியாமல்
இருக்கிறேன் உண்மையான அன்பு
கொண்டுள்ள ஒரு அப்பாவி ஜீவன்(கைப்புள்ள)....