Monday, October 31, 2011
Friday, October 28, 2011
நினைவுகள்...
கண்களால் என் இதயத்தை
களவாடி காதல் விதை விதைத்தவளே...
எப்பொழுதும் உன்னோடுதான்
இருப்பேன் என்றாயே....
இன்பத்திலும் துன்பத்திலும்
என் அருகே இருந்தவளே
காலம் மாறினாலும் நம் காதல்
என்றுமே மாறாது என்று சொன்னாயே!
நீ இல்லையென்றால் நான் இல்லை
என்று சொன்னாய் இன்று
அத்தனையும் பொய்யாக்கிவிட்டு
என்னை மறந்து சென்றது ஏனோ?
பெண்ணே என்றாவது ஒரு நாள்
என் மரண செய்திய கேட்டால்
நாம் பழகிய அந்த பழைய
நினைவுகளை நினைத்துப்பார்
அதுவே நீ என் மரணத்திற்கு செய்யும்
அஞ்சலி என் நினைத்துக்கொள்வேன்....!!!!
Wednesday, October 19, 2011
கண்ணீர் சிந்த மாட்டேன்...
என் சிரிப்பு, சந்தோஷத்தில்
அடங்கி இருக்கிறது
என் கஷ்டம், வேதனைகளின் கண்ணீர்
ஆனால் நான் அதற்காக கண்ணீர்
சிந்த மாட்டேன்...
அப்படி சிந்த நான் ஒன்றும்
கோழைய இல்லை
எத்தனை முறை
அடி பட்டாலும்
போராடுவேன் அடித்த
சுவடுகளை என்
ஆயிதமாக கொண்டு
என்றாவது ஒரு
நாள் கண்ணீர்
சிந்துவேன் அது
என் வெற்றியின்
ஆனந்த கண்ணீர்
மட்டுமே மீண்டும்
வெற்றி அடைவேன்
எத்தனை சோகங்களும்
தோல்விகளும் வந்தாலும்
அத்தனையும் தோல்வி அடைய
செய்து வெற்றி பெருவேன்......!!!
அடங்கி இருக்கிறது
என் கஷ்டம், வேதனைகளின் கண்ணீர்
ஆனால் நான் அதற்காக கண்ணீர்
சிந்த மாட்டேன்...
அப்படி சிந்த நான் ஒன்றும்
கோழைய இல்லை
எத்தனை முறை
அடி பட்டாலும்
போராடுவேன் அடித்த
சுவடுகளை என்
ஆயிதமாக கொண்டு
என்றாவது ஒரு
நாள் கண்ணீர்
சிந்துவேன் அது
என் வெற்றியின்
ஆனந்த கண்ணீர்
மட்டுமே மீண்டும்
வெற்றி அடைவேன்
எத்தனை சோகங்களும்
தோல்விகளும் வந்தாலும்
அத்தனையும் தோல்வி அடைய
செய்து வெற்றி பெருவேன்......!!!
Wednesday, October 12, 2011
எதுவும் இல்லாதவன்
என் பெயரை சொல்லி யாரும்
கூப்பிடாதிர்கள்!
நான் யாரும் எதுவும் இல்லாதவனாக
இருக்க ஆசைபடுகிறேன்!
இன்று முதல் எனக்கு பெயர், முகவரி
இல்லை!
நான் ஒரு மனித உருவம்
தன்னந் தனியாயாகவே
என் வாழ்க்கைப்பயணம் எல்லாமே
முடிகின்றன!
என்னுடல் ஒரு பூட்டப்பட்ட அறை
உங்களிடம் சாவிகள்
வேண்டுமானால் இருக்கலாம்
ஆனால் பூட்டுக்களை மாற்றிக்கொண்டே
இருப்பவன் நான்......!!!
Subscribe to:
Posts (Atom)