நினைவுகள்...
கண்களால் என் இதயத்தை
களவாடி காதல் விதை விதைத்தவளே...
எப்பொழுதும் உன்னோடுதான்
இருப்பேன் என்றாயே....
இன்பத்திலும் துன்பத்திலும்
என் அருகே இருந்தவளே
காலம் மாறினாலும் நம் காதல்
என்றுமே மாறாது என்று சொன்னாயே!
நீ இல்லையென்றால் நான் இல்லை
என்று சொன்னாய் இன்று
அத்தனையும் பொய்யாக்கிவிட்டு
என்னை மறந்து சென்றது ஏனோ?
பெண்ணே என்றாவது ஒரு நாள்
என் மரண செய்திய கேட்டால்
நாம் பழகிய அந்த பழைய
நினைவுகளை நினைத்துப்பார்
அதுவே நீ என் மரணத்திற்கு செய்யும்
அஞ்சலி என் நினைத்துக்கொள்வேன்....!!!!
No comments:
Post a Comment