Wednesday, August 31, 2011

காதல் என்பது சாக்கடை.....


காதல் என்பது சாக்கடைஎன்ற அப்பாவின் காலில்
அப்படியே விழுந்தேன்
அப்பா நீங்கள் தீர்க்கதரிசி"
என்னடா மகனே புத்தி வந்ததா?"
என்றபடியே தூக்கினார் அப்பா.
இத்தனை நாளாய் 'பன்னி! பன்னி!'
என்று திட்டிய காரணம்
இப்போதுதான் புரிகிறது" என்றேன்.

Tuesday, August 30, 2011

என் காதலி....

தொலைந்துபோன என் காதலியை
தேடிப்பயணிக்கும் நினைவுகளில்
எதிரே பயணத்தில் எதிர்பட்ட
ஒரு பெண்ணின் முகம் உன் முகம்போல்
வந்து போனது....
 
கூரியபார்வையும் குழந்தைபுன்னகையும்
தவிர உனக்கு எனக்கும் எந்த
சம்மந்தமுமில்லை அந்த பயணத்தில்!
இருந்தும் என் தேடல்கள் அந்த பெண்ணை
தாண்டி தொடரமுடியவில்லை
அந்த பெண்ணின் புன்னகையில்
என் மனம் மயங்கி விட்டது...
 
அவளுக்கும் எனக்குமான பூர்வஜென்ம
தொடர்பு உள்ளது போல் இருந்தது
அன்று அவளைபற்றியே சிந்தனையில்
திரும்புகையில் எதிரே என் காதலி வந்தாள்....

Friday, August 26, 2011

கனவுலகம்...

ஒவ்வொரு உயிரினங்களும்
இரண்டு உலகங்களில்
வாழ்ந்துகொண்டிருக்கிறது...!
ஒன்று நிஜவுலகம்...!
மற்றயது
கனவுலகம்...!

என் இதயம்.....

என் இதயம் கல் என்று சொன்ன பொழுது
நம்பவில்லையடி அன்று...
நீ பிரிந்த பின் உணர்கிறேன்
உண்மை என்பதை இன்று...
பின் இன்னும் வெடிக்காமல்
துடிக்கிறதே...!!!

Thursday, August 18, 2011

என் இதயத்தைக் கிழிக்கிறாய்???

ஏன் நீ மட்டும் புரியாமல்
என் இதயத்தைக் கிழிக்கிறாய்
ஓ ! என் இதயத்துள் உன்னைத் தேடுகிறாயா?
சரியென்று புன்னகையோடு தலையசைத்துவிடு
சிரித்துக்கொண்டே செத்துப்போய்விடுகிறேன்
ஏனெனில் காதல் என்றோ ஒரு நாள்
என்னையும் கொல்லுமென்று காதல்
வரலாறு சொல்லித்தந்ததால்.......!

பெண்ணே !

பெண்ணே !
தயவுசெய்து என்னை துளியும் வதைக்காதே
உன் கோபதாபங்களை எல்லாம்
என் மீது கொட்டித்தீர்க்காதே
என்னால் எதையுமே தாங்கமுடியாது
தாங்கும் வலிமையும் இல்லை...!!!

எனக்குள்ளே........

எனக்குள்ளே உன்னைப்பற்றி வரைந்த
ஓவியத்தை தினம் தினம்
கனவில் மீட்டி கண்டுகொள்கின்றேன்
நிழல்படம் சிலநொடி நேர்த்தியற்றதாக இருக்கலாம்
நிஜம் நீ என்றென்றும் மாறமாட்டாய்......!!

புலம்பிக்கொண்டிருக்கிறது.....

பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன
பயணச்சீட்டு
வீதியில் கிடந்து
புலம்பிகொண்டிருந்தது
பயணம்முடிந்துவிட்டதை
நினைத்து.........!!

விழிகளுக்கு சோகம்.....

வாடிய இதயம்
மீண்டும் துளிர்த்தது
உன் வார்த்தைகளை
கண்டு....
புன்னகைத்த விழிகள்
மீண்டும் நனைந்தது
உன் பிரிவுகளை
கண்டு....
அதனால்
இதயத்துக்கு இன்பம்
உன் நினைவுகளால்.....
விழிகளுக்கு சோகம்
என் பார்வைகளில்......!!!

Tuesday, August 16, 2011

நீ பொய்யே சொல்லியிருக்கலாம்......

காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்.......!!!

கண்ணீர் சிந்த வைக்கிறாய்....

என்னை தினமும்
ஒவ்வொரு துளியாக
கண்ணீர் சிந்த வைக்கிறாய்.
விரைவில்
என்னை பிரித்து
நீ கண்ணீர் ஆற்றில் நனையே
போகுவதை மறந்து......

உன் நினைவுகளை.....

என்னை விட்டுவிடு என்று
நீ சொன்ன அன்றே என்
உயிரை விட்டிருப்பேன்..
ஆனாலும் முயலவில்லையடி..
உன் நினைவுகளை
என் இதயம்
இழக்க‌ இசையாததால்....!!

இதயமே இல்லை....

இதயம் உருகும் வரை உன்னை
காதலித்தமையால்
இன்னொருவளை காதலிக்க
என்னிடம் இதயமே இல்லை....!!!

என் இதயம் உன்னையே காதலிக்கும்.....

ஒவ்வொரு துடிப்புக்கும்
இடையே கிடைக்கும்
மிகச்சிறிய இடைவெளியில்
இதயம் ஓய்வெடுத்துக்கொள்ளும்.
ஆனால்,
அந்த இடைவெளியிலும்
என் இதயம்
உன்னையே காதலிக்கும்.....!!!

மெளன அஞ்சலி....

நீ யாருக்கோ செய்த‌
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது...!

வாழ்ந்துவிட்டு போகிறேனே......

நீ
என்னை
காதலிக்கவில்லை
என்றாலும்
அதை
என்னிடம்
சொல்லாதே....
நீ என்னை
காதலிப்பாய்
என்ற‌
நம்பிக்கையில்
உயிர்
வாழ்ந்துவிட்டு
போகிறேனே......!!!

நானும் இருளானேன்...

என்னிடம் தொலைந்ததை
தேடி கொடுத்தாய்
கடைசியில்
நீயே
என்னை விட்டு
தொலைந்து போனாய்.
நிலவில்லாத வானில்
நானும் இருளானேன்...!!!

Sunday, August 14, 2011

அள்ளிக் கொண்டு போகிறாய் போகும்போது .....

நீ
வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது....!!!

Friday, August 12, 2011

உன் உயிரில்.....

உன் நிழலில்
என் பாதையென்று
ஊருக்கும் தெரியுமடி.
உன் உயிரில்
என் இதயமென்று
உனக்கும் தெரியுமடி.....!!!

தனிமையில் நான்......

அன்று
கடற்கரையில் நாம் இருவர் நடந்தும்
ஒருவரின் பாத சுவடுதான்!
மாலை வெயிலில் நாம் இருவர் அமர்ந்திருந்தும்
ஒரே நிழல்தான்!
இன்றும்
ஒருவரின் சுவடுதான்!
ஒரே நிழல்தான்!
ஆனால் தனிமையில் நான்........!!!

என் இதயத்தில் வாழ்ந்திடுவாய்.....

காதல் விதையாய் வந்த நீ
என் இதயத் துடிப்போடு சேர்ந்து வளர்கிறாய்
என்னுள் இதயத் துடிப்பு இருக்கும் வரை
என் இதயத்தில் வாழ்ந்திடுவாய்.....!!

மரணம் கூப்பிடுவதாய் உணர்கிறேன்.....

நீ திட்டினால் நான் கோபப்படுவதில்லை...
நீ அடித்தால் நான் அழுவதில்லை....
ஆனால் மெளனமாக மட்டும் இருந்து விடாதே என்னை மரணம் கூப்பிடுவதாய் உணர்கிறேன்.....!!!

சொல்லித் தெரிவதில்லை காதல்........

சொல்லித் தெரிவதில்லை காதல்
ஐலவ்யூ என்று
உன்னிடம் உளறுவதில்
உடன்பாடில்லை எனக்கு
நான் உன்னைக் காதலிப்பதை
உணரவேண்டும் நீயாய்
பிறகு சொல்லிக்கொள்ளாமலேயே
காதலிப்போம் இருவரும்.........!!!!

என் இதயம்.....

பூப்போன்ற
உன் இதழ்களைப்
பார்க்கும்போதெல்லாம்
வண்ணத்துப்பூச்சியாகிவிடத்
துடிக்கிறது
என் இதயம்............!!

முகம் பார்க்கும் கண்ணாடி நீ.....

பெண்ணே... நான் கோபத்தைக்கூட அன்பாய்க் காட்ட காரணம்...
நான் முகம் பார்க்கும் கண்ணாடி... நீ! உன்னை உடைத்தால் என் முகம் அல்லவா உடைந்து உடைந்து தெரியும்.....!!!

என் நரகமும் நீயே.........

இதுவரை நினைத்திருந்தேன்,
நீ மட்டுமே......
என் சொர்க்கம் என்று..
இப்பொழுதுதான்
உணருகிறேன்
என் நரகமும் நீயே என்று.....!!!

உன் அன்பை அழகாக வெளிபடுத்துகிறாய்......

அன்பை வெளிபடுத்த
துன்பத்தைத் தவிர
வேறு நல்லசந்தர்ப்பம் இல்லை.
உன் அன்பை அழகாக
வெளிபடுத்துகிறாய்!
எனது மனக்கவலையில்......!!!

நீ எங்கே சிறை வைக்கப் போகிறாய்??

இரும்புக் கதவுடைத்து
திருடியவன் இரும்பு கம்பிகளுக்கு
பின்னால் சிறை வைக்கப்பட்டான்,
மனக் கதவை உடைத்து
உன் இதயத்தை கொள்ளை
அடித்தவனை நீ எங்கே சிறை
வைக்கப் போகிறாய்???

Tuesday, August 9, 2011

நீ போகும்போது....

நீ
வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது...

உன் அழகை.......

உன் மேக்கப்
எல்லாம்
கலைத்து விட்டாலும்
உன் அழகைக்
கொஞ்சம் கூடக்
குறைத்துவிடுவதில்லை
மழை....!!!

உன் கண்களோடு.....

பேசுகின்ற
உன்கண்களோடு
பேசுகையில்
நான்
பறந்துகொண்டிருக்கிறேன்
அழுகின்ற
உன் கண்களோடு
பேசுகையில்
நான்
இறந்துகொண்டிருக்கிறேன்....!!!!!

எல்லோருக்கும் தெரிந்தபின்பே எனக்குத் தெரிந்தது....

நான்
உனக்கு அளித்த சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.....!!!

நானும் கழுதைதான்....

உன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான்.......!!!!

என்னை மறந்துவிடு......

நான் என்ன சொன்னாலும்
நீ கேட்ப்பாய் என்று தெரியும்
ஆனால் இந்த அளவிற்கு
கேட்ப்பாய் என்று தெரியாது,
ஏதோ கோபத்தில் என்னை
மறந்துவிடு என்று சொன்னால்,
இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய்....!!!

உயிர்பெறாத நம் காதல்...

என் அன்பை உன் இதயத்தில் அல்லவா விதைத்தேன் உலரவிட்டு விட்டாயே இதோ பார் என் மனதில் நீ பூத்துக் குலுங்குவதையும் புன்னகை புரிவதையும் கண்ணீர் விடுவதையும் கருவரையிலே அது உறங்கப்போவதையும உன்னால் உயிர்பெறாத நம் காதல்....!!!

நீ என்னை அழைத்திடவில்லை....

உன்னை கண்ணின் மணியாக
காத்திட நினைத்தேன்...
ஏனோ, இமை உதிர்க்கும்
ரோமமாகக் கூட
நீ என்னை கருதிடவில்லை!
உன் வாழ்க்கைத்
துணையாகிட வேண்டி
மனதில் தினமும் நினைத்தேன்...
ஏனோ, ஒரு வழித் துணையாகக் கூட
நீ என்னை அழைத்திடவில்லை.......!!!!

நீயே அறிமுகப்படுத்திவிட்டாயே!

நீ எனக்கு அறிமுகப்படுத்திய
காதலை, உனக்கு அறிமுகப்படுத்துவதற்காக
இதயத்தை அடகு வைத்து வாங்கிய ரோஜாவுடன்
வந்தேன்!,
அதற்குள் நீயே அறிமுகப்படுத்திவிட்டாயே!
உன் காதலனை....!!!

என் காதலின் சின்னமாக….

அன்பே எனக்காக அழ நினைத்தால்
என் கல்லறையில் அமர்ந்து அழு….
உன்னால் நான்தான் வாழமுடியவில்லை…
நீ விடும் ஒரு சொட்டு கண்ணீரால்
என் கல்லறையில் முளைத்திட்ட
சிறு செடியாவது வாழட்டுமே…
என் காதலின் சின்னமாக….!!!

என் அன்புத் தோழி...

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..
இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!
இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!

குழம்பிப் போனேன்.....

நீ பேசாமல் போனாய் புரிந்துகொண்டேன் பேசிவிட்டுப் போனாய் குழம்பிப் போனேன் எல்லோருக்கும் பேசுவதற்கு ஒரு மொழி தேவைப்படும் உனக்கு மட்டும் பேசாமல் இருப்பதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது...

காதலித்துக்கொண்டே இருப்பேன்....

நீ
காதலிக்காவிட்டாலும்
நான் காதலித்துக்கொண்டே இருப்பேன்
வரம் தராவிட்டாலும் தொடர்ந்து சாமியை வணங்கும் பக்தனைப்போல ...

காதலை நேசித்தால்.....

காற்றை
சுவாசித்தால்
வாசம் வரும்.....
காதலை
நேசித்தால்
கவிதை வரும்......!!

Sunday, August 7, 2011

கண்ணின் மணியாக.....

உன்னை கண்ணின் மணியாக
காத்திட நினைத்தேன்...
ஏனோ, இமை உதிர்க்கும்
ரோமமாகக் கூட
நீ என்னை கருதிடவில்லை!
உன் வாழ்க்கைத்
துணையாகிட வேண்டி
மனதில் தினமும் நினைத்தேன்...
ஏனோ, ஒரு வழித் துணையாகக் கூட
நீ என்னை அழைத்திடவில்லை......!!!

காதலுக்கு பயப்பிட்டேன் .......

அன்று உன்னை காதலிக்கும் போது
காதலுக்கு பயப்பிட்டேன் இன்று யாரையும்
காதலிக்க பயப்பிடுகிறேன் உன்னை
மாதிரியே இருந்து விடுவாளோ என்று...!!!

உன் இதயத்தில்.......

உன் காதல் எனும் பொய்யான வார்த்தையால்
என் மனதில் இடம் பிடித்தாய்...
ஆனால் உன் இதயத்தில் இன்னும்
அந்த பொய்யே உள்ளது.....!!!

நினைவுகள் மட்டும்..

நட்பென்று கை குலுக்கிக்கொள்ள...
கண்ணீரை மறைத்து கள்ளமாய் சிரிக்க
காலம் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை.
உறவு முக்கியம் இல்லை
நான் கொண்ட உணர்வே என் உயிர்...
போதும் இந்த நினைவுகள் மட்டும்....!!!

தூக்கத்தையே தேடும் பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன்.....

படுத்தவுடன் தூங்கிவிடும்
பழக்கம் இருந்ததெனக்கு..
இப்போதெல்லாம் தூக்கத்தையே தேடும்
பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன்.
காரணம் தூக்கத்தை விவாகரத்து செய்து,
கனவுகளை எனக்கு திருமணம்
செய்து வைத்தது நீதான்.....!!!!



Saturday, August 6, 2011

உனது பாதையில் மட்டுமே வரும்..

ஓடுவது ஆயிரம் பாதையில் என்றாலும்...
அங்கே ஒதுங்குவது உன் நிழலில் மட்டும் தான்.
ஆறுகள் ...பல பாதைகளில் வரலாம்.
ஆனால்...என் 'ஆறுதல்' என்பது
உனது பாதையில் மட்டுமே வரும்....!!!

நீ நினைவூட்டுவதால்...

என் காலத்தின்
ஒவ்வொரு நொடியையும்
நீ நினைவூட்டுவதால்...
என் காதல் தேவதையே...
என் மன அரங்கில்
உனது வருகையின் பின்...
கடிகாரம் என்பது
தேவையற்ற பொருள்ஆனதடி!

ரசித்துப் படிக்கிறேன்......

தெருவே
முகம் சுழித்து
மூக்கைப்
பொத்துகிற வேளையிலும்
நான் மட்டும்
அருகினில் சென்று
ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்......!!!